ஷங்கர் – ராம் சரண் படத்தின் ஷூட்டிங் எப்போது ?… வெளியானது புதிய அப்டேட்…

ஷங்கர் – ராம் சரண் படத்தின் ஷூட்டிங் எப்போது ?… வெளியானது புதிய அப்டேட்…

ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்குகிறது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் – ராம் சரண் படத்தின் ஷூட்டிங் எப்போது ?… வெளியானது புதிய அப்டேட்…

‘இந்தியன் 2’ படம் தொடர்பான பிரச்சனையில் இயக்குனர் ஷங்கர் சிக்கியுள்ளார். இந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுத்துவிட்டுதான் வேறு படத்தை இயக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஷங்கர் – ராம் சரண் படத்தின் ஷூட்டிங் எப்போது ?… வெளியானது புதிய அப்டேட்…

இது ஒருபுறம் இருந்தாலும் ராம் சரணை வைத்து படத்தை இயக்குவதில் ஆர்வமாக இருக்கிறார் ஷங்கர். அந்த படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகும் என கூறப்படுகிறது. பெயரிடப்படாத இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என‌ 5 மொழிகளில்‌ உருவாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷங்கர் – ராம் சரண் படத்தின் ஷூட்டிங் எப்போது ?… வெளியானது புதிய அப்டேட்…

இந்த படத்தில் ராம் சரண் முதல்முறையாக இளம் முதலமைச்சர் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் சல்மான் கான், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜுன் அல்லது ஜூலை மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதோடு இந்த படத்தின் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் தனுஷின் ‘டி43’ படத்திற்கு பிறகு இரண்டாவது படமாக பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Share this story