சோனு சூட்டை தொடந்து நிஜ ஹீரோவாகும் நடிகர் ஷாருகான் !

சோனு சூட்டை தொடந்து நிஜ ஹீரோவாகும் நடிகர் ஷாருகான் !

ஏழைகளுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கும் பாலிவுட் பிரபலங்களில் நடிகர் ஷாருகானும் ஒருவர்.

கொரோனா நோய் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் நடிகர் ஷாருகான் மும்பையில் அமைத்திருக்கும் அவரின் ஆபீஸ் கட்டிடத்தை , கொரோனா வைரஸ் தொற்றடைந்த நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனையாக மாற்றி பிரபல மருத்துவமனையின் உதவியுடன், அங்கு தேவையான மருத்துவ வசதிகளை தன்னுடைய சொந்த செலவில் செய்து கொடுத்திருக்கிறார். ஷாருக்கான் செய்த இந்த உதவி, இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வந்தது.

சோனு சூட்டை தொடந்து நிஜ ஹீரோவாகும் நடிகர் ஷாருகான் !

இந்நிலையில் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் 500 ரெம்டெவிசிர் ஊசி மருந்துகளை நடிகர் ஷாருக் கான் வழங்கி உதவியுள்ளார். இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதற்கு பகுதிலளித்த ஷாருகான் “நாம் ஒரு குழுவாக தொடர்ந்து பராமரித்தால் மட்டுமே இந்த நெருக்கடி சமாளிக்கப்படும். நானும் எனது அணியும் எதிர்காலத்தில் உதவ உதவுகிறோம். உங்கள் குழுவினரின் அனைத்து சேவைக்கும் நன்றி. ” என பதிலளித்துள்ளார்.

நடிகர் சோனு சூட்டை தொடர்ந்து நடிகர் ஷாருகானும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய முன்வந்திருப்பது பாலிவுட் நட்சத்திரங்கள் மேல் மதிப்பைகூட்டுகிறது.

Share this story