நேஷனல் க்ரஷ் ஃஆப் இந்தியா யார் தெரியுமா!?

நேஷனல் க்ரஷ் ஃஆப் இந்தியா யார் தெரியுமா!?

இந்திய இளைஞர்களின் நேஷனல் க்ரஷ் யார் தெரியுமா? ரஷ்மிகா மந்தான்னா தான். நாங்கள் சொல்லவில்லை. நம்ம கூகிள் ஆண்டவர் தான் சொல்றாரு.

நீங்கள் கூகிளில் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று தேடல் செய்தால் ரஷ்மிகா தான் அது என்று கூகிள் சொல்கிறது. இதற்கு முன் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த அனுஷ்கா, சமந்தா, பூஜா ஹெக்டே என அனைவரையும் முந்தியிருக்கிறார் ரஷ்மிகா.

நேஷனல் க்ரஷ் ஃஆப் இந்தியா யார் தெரியுமா!?

சலோ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான ரஷ்மிகா பின்னர் ‘கீதா கோவிந்தம்’ படம் மூலம் தெலுங்கு மட்டுமல்ல இந்தியா முழுதும் ரசிகர்களைச் சம்பாதித்தார். பின்னர் ‘டியர் காம்ரேட்’ அதையடுத்து மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகையாக மாறினார். பீஷ்மா படமும் அவருக்கு இன்னும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்தது.

நேஷனல் க்ரஷ் ஃஆப் இந்தியா யார் தெரியுமா!?

தற்போது ரஷ்மிகா தான் இந்தியாவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நடிகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.

தற்போது அல்லு அர்ஜுன் உடன் ‘புஷ்பா’ படத்தில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் .

Share this story