கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்ட ஷிவானி… கடுப்பான ரசிகர்கள்!

கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்ட ஷிவானி… கடுப்பான ரசிகர்கள்!

பிக்பாஸ் வீட்டில் ஷிவானியை கண்ணாடி பெட்டிக்குள் பூட்டி வைத்தது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே சக போட்டியாளர்கள் அவரை டார்கெட் செய்கிறார்கள் என்று பார்வையலாளர்கள் புகாரளித்து வருகின்றனர். ஷிவானி அவரது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு அனைவரிடமும் நன்றாக பழகி வருகிறார்.

கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்ட ஷிவானி… கடுப்பான ரசிகர்கள்!

அனைவரும் சகஜமாக பழகிக்கொண்டால் அது பார்வையாளர்களுக்கு சுவாரசியம் இருக்காது என்று, போட்டியாளர்களுக்குள் சர்ச்சை ஏற்படுத்துமாறு சில டாஸ்க்குகள் வழங்குவர்.

அதுபோல தற்போது பிக்பாஸ் வீட்டில் ஈடுபாடு மற்றும் சசுவாரசியம் இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து கண்ணாடிப் பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டும் என்பது டாஸ்க்.

கண்ணாடி பெட்டிக்குள் அடைபட்ட ஷிவானி… கடுப்பான ரசிகர்கள்!

போட்டியாளர்கள் அனைவரும் ரமேஷ் மற்றும் ஷிவானியைத் தேர்ந்தெடுத்து கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்துவிடுகின்றனர். கண்ணாடி பெட்டிக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி விரக்தியுடன் காணப்படுகிறார்.

இதனால் ஷிவானி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். அமைதியாக இருந்தால் அது ஈடுபாடு இல்லை என்று அர்த்தமா? என்றவாறு ஷிவானி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story