ஸ்ருதி ஹாசன் 4 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ட்வீட்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஸ்ருதி ஹாசன் 4 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ட்வீட்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

நடிகை ஸ்ருதி ஹாசன் கன்னடத் திரையுலகைப் பற்றி வெளியிட்ட பழைய ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தற்போது ஸ்ருதி அதுகுறித்து பதிலளித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் கன்னடத் திரையுலகில் ‘சலார்’ படம் மூலம் அறிமுகமாகிறார். ‘கேஜிஎஃப்’ படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ என்ற பிரம்மாண்ட படத்தை இயக்குகிறார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே கன்னட மக்கள் பிரஷாந்த் மீது பல விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஸ்ருதி ஹாசனை குறிவைத்துள்ளனர்.

ஸ்ருதி ஹாசன் 4 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ட்வீட்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருதி “நான் கன்னடத் திரையுலகை விரும்பவில்லை, எனவே பல படங்களை தவிர்த்துவிட்டேன்” என்று சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் 4 வருஷத்துக்கு முன்னாடி போட்ட ட்வீட்… வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தற்போது அந்த டீவீட்டைக் கண்டுபிடித்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இதையடுத்து தற்போது ஸ்ருதி அதுகுறித்து பதிலளித்துள்ளார். “எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. கன்னட திரையுலகின் ஒவ்வொரு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

‘சலார்’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள இந்தப் படத்தின் கதை பிடித்தது. எனவே இந்தப் படத்தில் நடிக்க உடனே சம்மதித்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Share this story