ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஸ்டாலின் தான் இத செஞ்சுருக்காரு…சித்தார்த் புகழாரம்!

ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஸ்டாலின் தான் இத செஞ்சுருக்காரு…சித்தார்த் புகழாரம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் நடிகர் சித்தார்த் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் திமுக இந்த முறை அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர். இதையடுத்து ஸ்டாலினுக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஸ்டாலின் தான் இத செஞ்சுருக்காரு...சித்தார்த் புகழாரம்!

தற்போது நடிகர் சித்தார்த் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த்த சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களை அழுத்தமாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில் “ஜெயலலிதாவுக்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். உங்கள் மகத்தான ஆட்சிக்கு வாழ்த்துக்கள். எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியைக் கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளுடனும் கேள்விகளுடனும் எதிர்நோக்கியிருக்கிறோம்.
வாழ்க தமிழ்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story