அப்டேடிற்காக காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அப்டேடிற்காக காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்து தற்போது மாநாடு படப்பிடிப்பில் கலந்து வருகிறார். தினம் ஒரு அப்டேட் என்பதைப்போல் தொடர்ந்து நடிகர் சிம்பு, அப்டேட்கள் வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் திளைக்க வைத்து வருகிறார்.

சுசீந்தரன் இயக்கத்தில் , சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஈஸ்வரன். பழனி பின்னணியில் கதைக்களம் கொண்டுள்ள இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

அப்டேடிற்காக காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்நிலையில் நேற்றைய தினம் இயக்குனர் சுசீந்திரன் , ”இன்று மாலை ஈஸ்வரன் படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் காத்திருக்கிறது ” என பீடிகைபோட்டிருந்தார். இதனால் ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் ,மாலை ஆகிவிட்டது அப்டேட் எங்க தல ? என்பதைப்போல் கேட்டு வந்தனர், அப்போது இயக்குனர் சுசீந்திரனின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். திடீரெனெ என்னவாயிற்று என்பது குறித்து இயக்குனரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Share this story