சாமி தரிசனம் செய்த ‘சிம்பு’ ரசிகர்கள் விரட்டியடிப்பு
திருவண்ணாமலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். அவரை பார்க்க சென்ற ரசிகர்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படம் ரிலீஸ் ஆவதால், சிம்புவை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தை வெளியிட சதி நடக்கிறது என நடிகரும், சிம்வுன் தந்தையுமான டி.ராஜேந்திரன் குற்றச்சாட்டியிருந்தார். இதையடுத்து இன்று திருவண்ணாமலையில் நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் கிரிவலம் புறப்பட்ட சிம்பு, கிரிவலப்பாதையில் உள்ள இடுக்குப்பிள்ளையார் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது ரசிகர்கள் திரண்டதால், அவர்களை பாதுகாவலர்கள் விரட்டியடித்தனர். இதனையடுத்து இடுக்குப்பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.