இந்திய அளவில் டிரெண்டாக சிம்பு… அப்படி என்னதான் பண்ணாரு…

இந்திய அளவில் டிரெண்டாக சிம்பு… அப்படி என்னதான் பண்ணாரு…

தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட போட்டோவால் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்பு என்ன பண்ணாலும் ஈசியாக புகழ் அடைந்து விடுகிறார். சர்ச்சையில் சிக்கினாலும், சரி நல்ல விஷயங்களை செய்தாலும் சரி..தனிக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ள சிம்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்திய அளவில் டிரெண்டாக சிம்பு… அப்படி என்னதான் பண்ணாரு…
Eeswaran Movie Location Stills Simbu

இப்படி அமைதியாக இருந்த சிம்பு திடீரென கடந்த வருட இறுதியில் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தை நடித்துமுடித்தார். இந்த படமும் பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தற்போது ’மாநாடு’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து ’பத்து தல’, கெளதம் மேனனுடன் ஒரு என ஒரே பிசியாக இருக்கிறார். இன்னும் சில படங்களில் நடிக்க பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் சிம்பு. இதில் போட்டோ, வீடியோ மற்றும் ஏதேனும் கருத்தை பதிவிட்டால் போதும் அது வைரலாகி விடுகிறது. அப்படிதான் இன்றும் கேஷுவலாக ஒரு பதிவை போட்டிருக்கிறார் சிம்பு. தனது இன்டாகிராமில் சட்டை இல்லாமல் காபி குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், அதனுடன் ’குட் மார்னிங்’ என போட்டு இருக்கார். தற்போது இந்த பதிவு இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதுவரை 2 லட்சம் லைக்குகளும், நிறைய கமெண்ட்ஸ்களும் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Share this story