சிம்புக்கு என்னாச்சு… பரபரக்கும் ‘மாநாடு’ இறுதிக்கட்ட ஷூட்டிங்…

சிம்புக்கு என்னாச்சு… பரபரக்கும் ‘மாநாடு’ இறுதிக்கட்ட ஷூட்டிங்…

‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்புக்கு என்னாச்சு… பரபரக்கும் ‘மாநாடு’ இறுதிக்கட்ட ஷூட்டிங்…

சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளது இந்த படத்தின் மீதான‌ எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிம்புக்கு என்னாச்சு… பரபரக்கும் ‘மாநாடு’ இறுதிக்கட்ட ஷூட்டிங்…

அரசியல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பணிகளை வேகமாக கவனித்து வருகிறார் வெங்கட் பிரபு.

சிம்புக்கு என்னாச்சு… பரபரக்கும் ‘மாநாடு’ இறுதிக்கட்ட ஷூட்டிங்…

இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட மேடை போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் மாநாடு போன்று உருவாகியுள்ளது இந்த செட்டில் கடந்த சில நாட்களாக ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்கில் நடிகர் சிம்பு கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மாநாடு செட்டில் எதோ கலவரம் நடந்தது போன்றும், அதில் நடிகர் சிம்பு காயம் ஏற்பட்டு கீழே விழுந்து கிடப்பது போன்றும் அந்த புகைப்படத்தில் உள்ளது. அதோடு அந்த இடத்தில் எஸ்.ஜே.சூர்யா போலீஸ் வேடத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Share this story