சிம்புடன் மீண்டும் இணையும் நயன்தாரா ?

சிம்புடன் மீண்டும் இணையும் நயன்தாரா ?

சிம்புவின் புதிய படத்தில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க பிரபல இயக்குனர் முயற்சி செய்து வருகிறார்.

2010ம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் சிம்பு-கவுதம் மேனன் கூட்டணி இணைந்தது. காதலை மென்மையாக பேசிய இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் மூலம் மீண்டும் கவுதம் மேனன் படத்தில் நடித்தார் சிம்பு.

சிம்புடன் மீண்டும் இணையும் நயன்தாரா ?

இந்நிலையில் சிம்பு- கவுதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின் முடிவாகாத நிலையில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க இயக்குனர் கவுதம் மேனன் முயற்சி செய்து வருகிறார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

சிம்புடன் மீண்டும் இணையும் நயன்தாரா ?

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பத்து தல படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்து இந்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சிம்புடன் மீண்டும் இணையும் நயன்தாரா ?

சிம்புடன் நயன்தாரா சேர்ந்து ‘வல்லவன்’ ‘இது நம்ம ஆளு’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். ரொம்ப நாளாக சிம்பு-நயன்தாரா மீண்டும் எப்போது படம் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இந்த படத்தின் மூலம் அது நிறைவேறுமா என ரசிகர்கள் ஆதங்கத்துடன் உள்ளனர்.

Share this story