"சிம்பு, அவர் ஒரு சுயம்பு"… பார்த்திபன் புகழ்ச்சியால் நெகிழ்ந்து பரிசு அனுப்பிய சிம்பு!

"சிம்பு, அவர் ஒரு சுயம்பு"… பார்த்திபன் புகழ்ச்சியால் நெகிழ்ந்து பரிசு அனுப்பிய சிம்பு!

நடிகர் சிம்பு பார்த்திபனுக்கு பூங்கொத்துடன் கைப்பட எழுதிய கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், SJ சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.
simbu: கொரோனாவால் மகிழ்ச்சியில் ...
பார்த்திபன் ஒரு பேட்டியில் சிம்பு பற்றி கேட்ட கேள்விக்கு ‘அவர் ஒரு சுயம்பு’ என்று புகழ்ந்து கூறியுள்ளார். இதைக் கேட்ட சிம்பு மனம் நெகிழ்ந்துள்ளார். சிம்பு – பார்த்திபன் கூட்டணி ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை குறிப்பிடத்தக்கது.
தற்போது பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு பூங்கொத்து மற்றும் கைப்பட எழுதிய கடிதம், சாக்லெட்கள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு. அந்தக் கடிதத்தில் “உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி, அவை மிகவும் எனக்கு நெருக்கமாகிவிட்டது. சிம்பு (சுயம்பு)” என்று குறிப்பிட்டுள்ளார்.
Parthiban hints at a stormy new project with Simbu - Tamil News ...
சிம்புவின் அந்தப் பரிசை வெளியிட்டுள்ள பார்த்திபன் “’சுயம்பு’ சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் வொர்க் kபண்ணலேன்னு”. அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!” என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் இந்தப் பதிவின் மூலம் சிம்பு – பார்த்திபன் விரைவில் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story