எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில் திரையுலகம் !

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில்  திரையுலகம் !

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புதுவித பழக்கம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் உறைய வைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் STR என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுவர் சிம்பு. நீண்ட நாட்களாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் சிம்பு ஒதுங்கியே இருந்தார். சிம்பு மீண்டும் சினிமாவில் எப்போது படம் நடிப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில்  திரையுலகம் !

திடீரென கடந்த வருட இறுதியில் இயக்குனர் சுசீந்திரனுடன் சிம்பு நடிக்க ஒப்பந்தமானார். படத்தின் முதற்கட்ட பணிகளை முடித்து 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு ஷூட்டிங் ஆரம்பமானது. ஆனால் படப்பிடிப்பு வேகமாக தொடங்கி 35 நாட்களிலேயே முடிந்துவிட்டது. சிம்புவின் காட்சிகள் 28 நாட்களிலேயே படமாக்கப்பட்டு கடந்த பொங்கலுக்கு ரிலீசாகி வெற்றிக்கரமான ஓடி வருகிறது.

இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. பொதுவாக ஷூட்டிங் என்றாலே சிம்பு நேரத்துக்கு வரமாட்டார். கால்ஷீட் சரியாக கொடுக்கமாட்டார் என ஏகப்பட்ட புகார்கள் இருக்கும்.

எப்படி இருந்த சிம்பு, இப்படியாகிட்டாரு.. ஆச்சர்யத்தில்  திரையுலகம் !

ஆனால் தற்போது ஆன்மீகத்தில் முழுவதுமாக ஈடுப்பட்டுள்ள சிம்பு, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சொல்லும் நேரத்தைவிட, 1மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறாராம். இதனால் படக்குழு ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர். இதையொட்டி மாநாடு படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

Share this story