இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவிக்கும் வெங்கட் பிரபு… ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவிக்கும் வெங்கட் பிரபு… ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

கொரானாவால் ‘மாநாடு’ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவித்து வருகிறார் வெங்கட் பிரபு.

இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவிக்கும் வெங்கட் பிரபு… ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

சிம்புவின் அசத்தலான நடிப்பில் அரசியல் படமாக உருவாகி வருகிறது ‘மாநாடு’. அரசியல் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். இதோடு எஸ் ஏ சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  

இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவிக்கும் வெங்கட் பிரபு… ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட க்ளைமாக்ஸ், அரசியல் மாநாடு போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டது. இதையடுத்து மாலத்தீவுக்கு சென்றிருந்த படக்குழுவினர், பாடல் காட்சி ஒன்றை படமாக்கினர்.

இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் தவிக்கும் வெங்கட் பிரபு… ‘மாநாடு’ படத்தின் புதிய அப்டேட்…

இதோடு மாலத்தீவு ஏர்ப்போர்டில் சில காட்சிகள் எடுக்க திட்டமிட்டிருந்தனர். இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்தால் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும். ஆனால் அதற்குள் கொரானா 2வது அலை பரவல் காரணமாக மாலத்தீவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடத்தமுடியாமல் சென்னை திரும்பிவிட்டனர் படக்குழுவினர். இந்நிலையில் மாலத்தீவு செல்வது இனி கடினம் என்பதால், அந்த காட்சியை ஓசூர் ஏர்ப்போர்ட்டில் எடுக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்கிடையே இந்த படத்தின் டப்பிங் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story