என்னை யாரோ கொல்ல வர்றாங்க, ஹோட்டலில் அலறி அடித்து ஓடிய சுசித்ரா?

என்னை யாரோ கொல்ல வர்றாங்க, ஹோட்டலில் அலறி அடித்து ஓடிய சுசித்ரா?

பாடகி சுசித்ரா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப் படுத்தப்பட்டிருந்த ஹோட்டலில் அலறிக் கொண்டே ஓடியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தற்போது கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பு நடவடிகளைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்தவகையில் இந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள இருந்த 16 போட்டியாளர்கள் ஹோட்டலில் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

என்னை யாரோ கொல்ல வர்றாங்க, ஹோட்டலில் அலறி அடித்து ஓடிய சுசித்ரா?

இந்த 4-வது சீசனில் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, ஆஜித், ரேகா, ஜித்தன் ரமேஷ், ஆரி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி, ரியோ, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, சோம், பாலா, சம்யுக்தா, வேல்முருகன் ஆகியோர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்தனர். பின்னர் நடிகை ரேகா முதல் ஆளாக வீட்டிலிருந்து வெளியேறினார். அதையடுத்து வைல்ட் கார்டு என்ட்ரியில் தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

என்னை யாரோ கொல்ல வர்றாங்க, ஹோட்டலில் அலறி அடித்து ஓடிய சுசித்ரா?

தற்போது இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியில் பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகவும் அவர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுசித்ரா தன்னை யாரோ கொல்ல வருவதாகக் கூறிக்கொண்டு ஹோட்டலில் அறையில் இருந்து ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதைப் பார்த்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Share this story