‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு… சிவகார்த்திகேயன் ட்வீட்…

‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு… சிவகார்த்திகேயன் ட்வீட்…

டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.

‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு… சிவகார்த்திகேயன் ட்வீட்…

 ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு… சிவகார்த்திகேயன் ட்வீட்…

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த மாதத்தில் நடைப்பெற்ற இறுதிக்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் பிரொக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் கோடை விடுமுறையில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Share this story