‘டாக்டர்’ ரிலீஸ் எப்போது ? படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘டாக்டர்’ ரிலீஸ் எப்போது ? படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சரியான நேரத்தில் ரிலீசாகும் என படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் – நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்பிறகு கொரானா 2வது அலை வந்துவிட்டதால் எப்படி ரிலீஸ் செய்வது என தெரியாமல் படக்குழு தவித்து வருகிறது. இதற்கிடையே இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது.

‘டாக்டர்’ ரிலீஸ் எப்போது ? படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக என்னிடம் கேட்டு வருகின்றனர். ஆனால் நானும் ஒரு தயாரிப்பாளராக இந்த கொரானா காலத்திலும் படத்தை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய முயற்சித்து வருகிறேன்.

கொரானா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நமது திரையுலகை சார்ந்த நண்பர்கள் தொடர்ந்து உயிரிழந்துக்கொண்ட வருகின்றனர். இதனால் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து என்னால் சிந்திக்கவே முடியவில்லை. கொரானா பிரச்சனையிலிருந்து முதலில் நாம் முழுமையாக வெளியே வருவோம், அதன் பிறகு ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து முடிவுவெடுக்கலாம். அனைவரும் கொரானா வழிமுறைகளை பின்பற்றி வீட்டில் இருங்கள் என குறிப்பிட்டுள்ளார். படத்தயாரிப்பாளரின் சொன்ன கருத்திலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் ‘டாக்டர்’ படத்தை திரையரங்கில் வெளியிடவே படக்குழு விரும்புவதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story