விக்ரம் வேதா கூட்டணியுடன் கைகோர்க்கும் எஸ்ஜே சூர்யா!

விக்ரம் வேதா கூட்டணியுடன் கைகோர்க்கும் எஸ்ஜே சூர்யா!

இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் புதிய தொடர் உருவாகவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

இயக்குநர் எஸ்ஜே சூர்யா தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். வில்லன், ஹீரோ என ரவுண்டு கட்டி அடித்து வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா கூட்டணியுடன் கைகோர்க்கும் எஸ்ஜே சூர்யா!

எஸ்ஜே சூர்யா தற்போது புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஒரு வலைத்தொடரில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமான நடிகை லைலா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த லைலா தற்போது இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம்.

புஷ்கர் காயத்ரி, எஸ்.ஜே.சூர்யாவை மனதில் வைத்து தான் இந்த வலைத் தொடருக்கான கதையை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.  இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாம்.

Share this story