கொரோனா நெருக்கடியில் உதவும் சிரஞ்சீவி… நெகிழ்ந்து பாராட்டிய சோனு சூட்!

கொரோனா நெருக்கடியில் உதவும் சிரஞ்சீவி… நெகிழ்ந்து பாராட்டிய சோனு சூட்!

பாலிவுட் நடிகர் சோனு சூட் நடிகர் சிரஞ்சீவியைப் புகழ்ந்துள்ளார்.

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதன் மூலம் சோனு சூட் மிகவும் பிரபலமானார். மேலும் உலகம் முழுவதும் இருந்து மக்கள் சோனு சூட்டை பாராட்டி வருகின்றனர். தற்போது சோனு சூட் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணின் கொரோனா தடுப்பு முன்னெடுப்புகளைப் பாராட்டியுள்ளார்.

கொரோனா நெருக்கடியில் உதவும் சிரஞ்சீவி… நெகிழ்ந்து பாராட்டிய சோனு சூட்!

“சிரஞ்சீவி சார் செய்து வருவது எனக்கு மிகவும் உத்வேகம் அளிக்கிறது. அரசாங்கங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியாது. திரைப்பட நட்சத்திரங்கள் சமூகப் பொறுப்புடன் முன்வந்தால், அது மக்களுக்கு ஆறுதலளிக்கும், மக்களை பாதுகாப்பாக உணரச் செய்யும். நீதி ரீதியாக செல்வாக்கு உடையவர்கள் முன்வந்து இந்த துயரத்தில் சமூகத்திற்கு உதவ வேண்டும்” என்று சோனு சூட் இதற்கு முன் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

கொரோனா நெருக்கடியில் உதவும் சிரஞ்சீவி… நெகிழ்ந்து பாராட்டிய சோனு சூட்!

சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்திருந்தனர். சமீபத்தில் திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறு தொடர்ந்து மக்களுக்கு அவர்கள் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story