ரஜினிக்காக கடைசியாக பாடிவிட்டு விடைபெற்ற எஸ்பிபி… இமான் நெகிழ்ச்சி!

ரஜினிக்காக கடைசியாக பாடிவிட்டு விடைபெற்ற எஸ்பிபி… இமான் நெகிழ்ச்சி!

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.இறுதி சடங்குகள்நாளை காலை 11 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிக்காக கடைசியாக பாடிவிட்டு விடைபெற்ற எஸ்பிபி… இமான் நெகிழ்ச்சி!

எஸ்பிபி தனது வாழ்நாளில் இந்தியாவின் பல மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 முறை தேசிய விருது பெற்றுள்ளார். பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார். இன்னும் பல ஏராளமான விருதுளையும் எஸ்பிபி குவித்துள்ளார்.

ரஜினிக்காக கடைசியாக பாடிவிட்டு விடைபெற்ற எஸ்பிபி… இமான் நெகிழ்ச்சி!

தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘அண்ணாத்’த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். எஸ்பிபி மறைவு குறித்து பதிவிட்டுள்ள அவர் அவரது மறைவு குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் அண்ணாத்த படத்தில் ஓப்பனிங் பாடல் எஸ்பிபி பாடியுள்ளார். அவர் கடைசியாக பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிய பாக்கியம் செய்ததாகவும் இமான் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/immancomposer/status/1309439745647239171

Share this story