திடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்!

திடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சஞ்சீவ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். மெட்டி ஒலி முதல் அண்ணாமலை,ஆனந்தம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சஞ்சீவ் திருமதி செல்வம் சீரியல் மூலம் சின்னத்திரையின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார்

சின்னத்திரை நடிகராக மட்டுமல்லாமல், தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். ஜீ தமிழில் வெளியான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ் சில காரணங்களால் அந்த தொடரை விட்டு வெளியேறினார்.

திடீரென்று நிறுத்தப்பட்ட சன் டிவி சீரியல்… சோகத்தில் ரசிகர்கள்!

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியலில் நடித்துவருகிறார் . பூர்ணிமா பாக்கியராஜ், ஹரிப்ரியா ஆகியோரும் இந்த சீரியலில் நடித்து வந்தனர். கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் தற்போது இந்த சீரியல் வரும் வாரத்துடன் நிறைவு பெற உள்ளது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது இதன் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியலில் நடித்து வரும் சாம்பவி என்பவர் சீரியல் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், சீரியலுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.

திடிரென்று சீரியல் நிறுத்தப்படுவதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Share this story