நடிகை சன்னி லியோன் மீது கேரள போலீஸ் மோசடி வழக்கு!

நடிகை சன்னி லியோன் மீது கேரள போலீஸ் மோசடி வழக்கு!

கேரளாவில் விடுமுறையைக் கொண்டாட வந்துள்ள சன்னி லியோன், தன்னிடம் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோனை விசாரித்துள்ளனர்.

சன்னி லியோன் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக உறுதியளித்து ரூ .29 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லையாம். இதனால் பெரம்பவூரைச் சேர்ந்த ஆர் ஷியாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் சன்னி லியோனை வெள்ளிக்கிழமை இரவு குற்றப்பிரிவுக் குழு விசாரித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை சன்னி லியோன் மீது கேரள போலீஸ் மோசடி வழக்கு!

கொரோனா தொற்று காரணமாகத் தான் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளாராம். நிகழ்ச்சியை அதன் அமைப்பாளர்கள் ஐந்து முறை ஒத்திவைத்தாலும், அவர்களால் திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்த விவகாரத்தில் புகார் அளித்தவருக்கும் சன்னி லியோனுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Share this story