நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது அரசியலில் களமிறங்குவார் என மக்கள் எதிர்பார்த்து வந்தநிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போதைக்கு கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம் , ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘ அண்ணாத்த ‘ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன் . கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி , முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம் . இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோணா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது , ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது , மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது , அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும் . ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது , என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு.கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு , பல கோடி ரூபாய் நஷ்டம் . இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை . இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் .

நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் , சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது . இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள் . நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி , பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் . 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான் , இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து , பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு , மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும் . என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன் , நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து , அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் . இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும் . இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் , மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் . மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும் , நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள் , அது வீண் போகாது, அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும் . கடந்த நவம்பர் 30- ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘ உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம் , நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே ‘ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் . நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் , பாசத்திற்கும் தலை வணங்குகிறேன் . ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

நாலுபேர் நாலுவிதமாக பேசினாலும் சரி என, நடிகர் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு !

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் . தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன் . நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும் , வெளிப்படை தன்மையையும் விரும்பும் , என் நலத்தில் அக்கறையுள்ள , என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும் , தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் . வாழ்க தமிழ் மக்கள் ! வளர்க தமிழ்நாடு !! ஜெய் ஹிந்த் !!! அன்புடன் ரஜினிகாந்த்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த முடிவு ரசிகர்களை ஏமாற்றி இருந்தாலும் அதுவே அவரது உடல்நிலைக்கு ஏற்ற நல்ல முடிவு என ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர் என்பதே நிதர்சனம்.

Share this story