முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு நடிகர் வாழ்த்துக்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதையடுத்து திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

தற்போது நடிகர் சூர்யா முதல்வர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். “

“முடியுமா நம்மால்?’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம் …’ முடித்தே தீருவோம்!’ என்பது வெற்றிக்கான தொடக்கம்…” -முத்தமிழ் அறிஞர் கலைஞர் .

‘முடித்தே தீர வேண்டிய’ பல காரியங்கள் வரிசைகட்டி முன்நிற்க, சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ‘மக்களின் முதல்வராக ‘ பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் . சுவாசிப்பதற்கு’ உயிர் காற்று’கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிற இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.

தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவமும் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள். தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story