சூர்யாவின் ‘வாடிவாசல்’ பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்… ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

சூர்யாவின் ‘வாடிவாசல்’ பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்… ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ படத்தின் இசை பணியை தொடங்கிவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்… ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

சூர்யாவின் 40வது படம் பாண்டியராஜ் இயக்கத்தில் தயாராக வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். நடிகர் வினய் வில்லனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மதுரை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சூர்யாவின் ‘வாடிவாசல்’ பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்… ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

இதற்கிடையே இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, கிஷோர், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுற்று தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறனும் – நடிகர் சூரியாவும் இணையும் திரைப்படம் ‘வாடிவாசல்’. கடந்த ஆண்டே தொடங்கவேண்டிய இப்படம் பல்வேறு காரணங்கள் எந்த பணியும் நடைபெறவில்லை. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றது வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது தெரிந்த விஷயம். என்றாலும் அவர் இந்த படம் தொடர்பாக ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் வாடிவாசல் இசைப்பணிகளை தொடங்கவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் படத்தின் பணிகளும் விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Share this story