பேக் டூ ஃபார்ம்… கொரோனவிலிருந்து மீண்ட தமன்னா… மருத்துவர்களுக்கு நன்றி!

பேக் டூ ஃபார்ம்… கொரோனவிலிருந்து மீண்ட தமன்னா… மருத்துவர்களுக்கு நன்றி!

நடிகை தமன்னா தான் கொரோனாவிலுருந்து மீளக் காரணமான மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமன்னா இந்த மாதம் 4-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு சில தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

பேக் டூ ஃபார்ம்… கொரோனவிலிருந்து மீண்ட தமன்னா… மருத்துவர்களுக்கு நன்றி!

கொரோனாவிலிருந்து மீண்ட தமன்னா சமீபத்தில் தனது மும்பை வீட்டிற்குத் திரும்பினார். அதையடுத்து தனது அன்றாட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். தற்போது உடற்பயிற்சி செய்து தனது ஃபிட்னெஸ்ஸை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

https://www.instagram.com/tv/CGZDYKnhwua/?utm_source=ig_web_copy_link

“இது என் ஸ்டாமினாவை திரும்பப் பெறுவதற்கான நேரம். கொரோனா வைரஸிலிருந்து மீண்ட பிறகு இது மிக முக்கியமான படியாகும். தொடர்ந்து செல்லுங்கள், ஆனால் உங்கள் உடலைக் கவனிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தான் கொரோனாவில் இருந்து மீள உதவிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Image

“ஹைதெராபாத் காண்டினெண்டல் மருத்துவமனையின் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தேன், பலவீனமாக இருந்தேன், பயந்தேன், ஆனால் நான் வசதியாகவும் சிறந்த முறையில் சிகிச்சை பெறவும் அவர்கள் உறுதி செய்தனர். கருணை, நேர்மையான அக்கறை, எல்லாவற்றுடன் என்னை குணப்படுத்தினர்” என்று தமன்னா பதிவிட்டுள்ளார்.

Share this story