பிரபல சின்னத்திரை நடிகருக்கு கேன்சர்..தழுதழுத்த குரலில் வீடியோ வெளியிட்ட மகள்

ff


சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் பெருமளவு பிரபலம் கிடைத்து வருவது உங்களுக்கு அறிந்த விஷயங்கள் ஒன்றுதான். அந்த வகையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து அந்த நடிகரின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பதை விளக்கக்கூடிய வகையில் அவரின் மகள் வெளியிட்டு இருக்கக் கூடிய வீடியோவானது இணையங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நடிகர் பெயர் நேத்ரன் இவர் தொலைக்காட்சி சீரியலில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். பெரும்பாலும் வில்லத்தனத்தை காட்டி நடிக்க கூடிய இவர் முதல் முதலாக மருதாணி சீரியலில் அறிமுகம் ஆனார்.இந்த சீரியலை அடுத்து பல சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் தீபா என்பவரை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு அபிநயா, அஞ்சனா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். ரேவன் திரைப்படத்தில் இவரது மூத்த மகள் அபிநயா கதாநாயகியாக நடித்து வருகிறார் 

g
இந்த நிலையில் தான் நேற்று நேத்ரனின் மகள் அபிநயா தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் தன்னுடைய தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதற்கான சிகிச்சையும் நடந்து முடிந்து விட்டது. ஆனால் ஐசியூவில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் கல்லீரலில் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் சொன்ன நிலையில் அவர் விரைவில் குணம் அடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்பதோடு நிச்சயமாக அனைவரது பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

Share this story