வி.பி.எஃப் கட்டணம் கிடையாது, தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை… தயாரிப்பாளர்களின் அதிரடி அறிக்கை!

வி.பி.எஃப் கட்டணம் கிடையாது, தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை… தயாரிப்பாளர்களின் அதிரடி அறிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் திரைத்துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. திரையரங்குகள் இயக்கப்பட்டும் பல மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது மத்திய அரசு தளர்வுகள் அளித்துள்ளதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் தியேட்டர்கள் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இயங்கி வருகிறது.

தமிழக அரசு நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர் திறக்க அனுமதி அளித்தனர். தற்போது ஆந்திராவில் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த ஏகப்பட்ட குளறுபடிகளால், தொடர்ந்து படம் தயாரித்து வந்த தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று துவங்கினர்.

வி.பி.எஃப் கட்டணம் கிடையாது, தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை… தயாரிப்பாளர்களின் அதிரடி அறிக்கை!

பின்னர் விபிஎப் கட்டணம், நடிகர்கள் சம்பளம் குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைளை முன் வைத்தனர். தற்போது தெலுங்கிலும் இதேபோல் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகியுள்ளது. அங்கும் விபிஎப் கட்டணம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர அரசு தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து பல கோரிக்கைகளுடன் தெலுங்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கை பின்வருமாறு:

“நீண்ட நாட்கள் ஊரடங்கிற்குப் பின் இப்போது திரையரங்குகளைத் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக கவனிக்கப்படாமல் இருக்கும் எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பின்பு நாம் இணைந்து புதிதாக திரைப்படங்களை வெளியிடுவது சரியானதாக இருக்கும்.

  1. தயாரிப்பாளர்:திரையரங்கம் ஆகியவர்களுக்கு, தற்போதுள்ள
    முதல் வாரம் 55:45,
    2-வது வாரம் 45:55,
    3-ம் வாரம் 40:60,
    4-ஆம் வாரம் 35:65
    என்னும் வாராந்திர சதவீதங்கள் இனி
    60:40,
    50:50,
    40:60
    என்று திருத்தப்படும்
  2. AP & T, அதாவது மொத்த ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் முழுவதும் மேற்குறிப்பிட்ட சதவீதங்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.
  3. வி.பி.எஃப் கட்டணங்கள் தயாரிப்பாளரால் இனிமேல் செலுத்தப்பட மாட்டாது.
  4. சினிமா டிரெய்லர்கள் இனி இலவசமாக ஔிபரப்பப்பட வேண்டும். மேலும், வளாகத்திற்குள் காட்சிக்கு தயாரிப்பாளரால் வழங்கப்பட்ட அனைத்து சினிமா தொடர்பான விளம்பரப் பொருட்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.
  5. தெலுங்கு படங்களுக்கு ஷோ முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
  6. காம்போ பொதிகள் எனப்படும் டிக்கெட்டுடன் திண்பண்டங்கள் என்ற வகையான டிக்கெட் விற்பனை இனி கூடாது.
  7. டிக்கெட்டின் விலைகளை நேரத்திற்குத் தகுந்தவாறு, படத்திற்குத் தகுந்தவாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் விருப்பத்தின்படி செயல்படுத்தப்பட வேண்டும்.
  8. டிக்கெட் தொடர்பான விற்பனை தளங்களில், அதாவது ஆன்லைன் டிக்கெட் விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்த வருவாயும், தயாரிப்பாளருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  9. பராமரிப்புக் கட்டணங்களை இனிமேல் தயாரிப்பாளரின் ஷேரிலிருந்து வசூலிக்கப்படக் கூடாது.
  10. ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்குள்ளும் தயாரிப்பாளர்களின் பங்குத் தொகையினை தியேட்டர்கள் வழங்க வேண்டும்.
  11. அதிக எண்ணிக்கையிலான காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கினால், மல்டிபிளெக்ஸ் செயல்படுத்தப்பட வேண்டும்.
  12. மல்டிபிளக்ஸ் 100% ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்படும் வரை தங்கள் படத்தை வெளியிட தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன?

எங்களின் கோரிக்கைகள் உங்கள் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என உறுதிமயாக நம்புகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story