50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி… காட்சிகளை அதிகப்படுத்த உத்தரவு…

50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி… காட்சிகளை அதிகப்படுத்த உத்தரவு…

ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கம் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 

ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், இதை 100 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆதரவு இருந்தாலும், எதிர்ப்பு குரல்களும் தொடர்ந்து எழுந்தது.

50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி… காட்சிகளை அதிகப்படுத்த உத்தரவு…


இதையடுத்து“50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை ஏன் பின்பற்றவில்லை என கேள்வி எழுப்பியுள்ள மத்திய அரசு, உடனடியாக கொரானா வழிமுறை பின்பற்றுமாறு கூறியுள்ளது.

இந்நிலையில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்திருந்தனர். 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி… காட்சிகளை அதிகப்படுத்த உத்தரவு…

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 


இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Share this story