திரைத்துறைத் தொழிலார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யும் டோலிவுட் பிரபலங்கள்!

திரைத்துறைத் தொழிலார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யும் டோலிவுட் பிரபலங்கள்!

இந்தியா கொரோனா வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. தற்போதைக்கு தடுப்பூசி ஒன்றே நம் முன் இருக்கும் மாட வெளிச்சமாகத் திகழ்கிறது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அங்கு தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

திரைத்துறைத் தொழிலார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யும் டோலிவுட் பிரபலங்கள்!

எனவே தற்போது நடிகர்கள் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட் நடிகர்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி தவறாமல் கிடைப்பதற்கு உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனராம்.

சிரஞ்சீவி அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து சினிமா தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தைத் துவங்கியுள்ளார். மேலும் நடிகர் அல்லு அர்ஜுன், 45 வயதுக்கு மேற்பட்ட திரைத்துறை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்தார். இது தவிர டோலிவுட்டில் உள்ள முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனவாம்.

தெலுங்குத் திரைத்துறை பிரபலங்களின் இந்த முன்னெடுப்பு மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

Share this story