கொரோனா நெருக்கடியிலும் வாழ்த்துக்கள் பொழிந்த அனைவருக்கும் நன்றி… த்ரிஷா நெகிழ்ச்சி!

கொரோனா நெருக்கடியிலும் வாழ்த்துக்கள் பொழிந்த அனைவருக்கும் நன்றி… த்ரிஷா நெகிழ்ச்சி!

நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா நேற்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துமழை பொழிந்தனர்.

‘ஜோடி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் மகுடம் சூடி சாதனை படைத்துள்ளார் த்ரிஷா. எனவே த்ரிஷாவுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கொரோனா நெருக்கடியிலும் வாழ்த்துக்கள் பொழிந்த அனைவருக்கும் நன்றி… த்ரிஷா நெகிழ்ச்சி!

தற்போது த்ரிஷா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “”நம் உலகம் குறிப்பாக நம் நாடு இந்த இக்கட்டான மனதை உலுக்கி வரும் நேரத்தைச் சந்தித்து வரும் வேளையிலும் கூட, உங்கள் நேரத்தை ஒதுக்கி எனக்காக வாழ்த்துக்கள் மற்றும் பாசத்தைப் பொழிந்த அனைவருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் உங்கள் அனைவருடன் சேர்ந்து அதைக் கொண்டாட மிகவும் ஆவலாக உள்ளேன். அதுவரை நாம் நம் வேலையைச் செய்துகொண்டு பாதுகாப்பாக இருப்போம். தேவைப்படும் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story