படங்கள் நடிப்பதிலிருந்து விலகிய காரணம் என்ன? மனம் திறந்த ட்விங்கிள் கண்ணா!

படங்கள் நடிப்பதிலிருந்து விலகிய காரணம் என்ன? மனம் திறந்த ட்விங்கிள் கண்ணா!

நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி நடிகை ட்விங்கிள் கண்ணா, தான் திரைத்துறையில் இருந்து விலகியிருப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணாவின் மகளான ட்விங்கிள் கண்ணா 90-களில் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்தார். சல்மான் கான், ஷாரூக் கான் என பாலிவுட்டின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். பின்னர் இவர் நடிகர் அக்‌ஷய் குமாரைத் திருமணம் செய்து கொண்டார்.

படங்கள் நடிப்பதிலிருந்து விலகிய காரணம் என்ன? மனம் திறந்த ட்விங்கிள் கண்ணா!

ட்விங்கிள் கண்ணா கடைசியாக நடித்த படம் 2010-ல் வெளியான ‘டீஸ் மார் கான்’. அதையடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் எழுத்தாளராக தன்னை உருமாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் ட்விங்கிள் கண்ணா தான் திரைத்துறையில் இருந்து விலகியிருப்பதற்கான காரணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

”இன்றைய சினிமாவை ஒப்பிடுகையில் நான் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்கென்று தனியாகக் கதைகள் உள்ள படங்கள் அதிகம் வரவில்லை. ஆனால், நான் சினிமாவிலிருந்து விலக அது காரணமல்ல. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் ஸ்பாட்லைட்டிலிருந்து வெளியாகும் வெப்பம் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை”. என்று தெரிவித்தார்.

Share this story