‘கர்ணன்’ கதை நடந்த வருடத்தை மாற்ற கோரிக்கை வைத்த உதயநிதி… ஒப்புக்கொண்ட படக்குழுவினர்!

‘கர்ணன்’ கதை நடந்த வருடத்தை மாற்ற கோரிக்கை வைத்த உதயநிதி… ஒப்புக்கொண்ட படக்குழுவினர்!

கர்ணன் படத்தின் கதை நடந்த வருடத்தை மாற்ற மாரி செல்வராஜ் மற்றும் தாணுவிடம் கோரிக்கை வைத்ததாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் திரைப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதிகார ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளெர்ந்தெழுவதாய் அமைக்கப்பட்ட திரைக்கதையயை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘கர்ணன்’ கதை நடந்த வருடத்தை மாற்ற கோரிக்கை வைத்த உதயநிதி… ஒப்புக்கொண்ட படக்குழுவினர்!

கர்ணன் படத்தில் கொடியன்குளம் கலவரம் நடந்தது 1997-ம் ஆண்டு என்று காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கலவரம் 1995-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து படக்குழுவினரிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ்
மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story