கொரோனா பாதிப்பு: ரூ 1.25 கோடி நிதியுதவி அளித்த அல்லு அர்ஜுன்

கொரோனா பாதிப்பு: ரூ 1.25 கோடி நிதியுதவி அளித்த அல்லு அர்ஜுன்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது.  இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு, பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண நிதியாகவும், பாதிக்கப்பட்டுள்ள  திரைப்பட பணியாளர்களுக்காகவும்  திரைப்பிரலபங்கள் உதவி செய்து வருகின்றன.

கொரோனா பாதிப்பு: ரூ 1.25 கோடி நிதியுதவி அளித்த அல்லு அர்ஜுன்

தமிழ் திரையுலகில் பெப்சி பணியாளர்களுக்காக நடிகர்கள் பலர் பணமாகவும், அரிசி மூட்டைகளை வழங்கியும் உதவி செய்தனர். இதேபோல் தெலுங்குத் திரையுலகில்  பிரபாஸ் 4 கோடி ரூபாய், பவன் கல்யாண் 2 கோடி ரூபாய், சிரஞ்சீவி 1 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், ஜூனியர் என்.டி.ஆர் 75 லட்ச ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் என நிதியுதவி அளித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து  தற்போது அல்லு அர்ஜுனும், தன் பங்காக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து  தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள அவர், “கோவிட்-19 தொற்று பலரது வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இந்த கடினமான சூழலில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரள மக்களுக்கு 1.25 கோடியை நன்கொடையாக அளிக்கிறேன். நாம் ஒன்றுபட்டுப் போராடி விரைவில் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என நம்புகிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline) on

 

Share this story