”காவல்துறையினர் தான் நிஜ கதாநாயகர்கள்” ஆட்டோகிராஃப் பெற்றுகொண்டு நன்றி கூறிய நடிகர் சூரி…

”காவல்துறையினர் தான் நிஜ கதாநாயகர்கள்” ஆட்டோகிராஃப் பெற்றுகொண்டு நன்றி கூறிய நடிகர் சூரி…

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், மருத்துவத்துறையினர்,  காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளை செவ்வனே செய்து வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

”காவல்துறையினர் தான் நிஜ கதாநாயகர்கள்” ஆட்டோகிராஃப் பெற்றுகொண்டு நன்றி கூறிய நடிகர் சூரி…

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்லும் விதமாக  நடிகர் சூரி, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்குச் சென்று பாராட்டுக்களை தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையிலும், உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களை காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர்.

”காவல்துறையினர் தான் நிஜ கதாநாயகர்கள்” ஆட்டோகிராஃப் பெற்றுகொண்டு நன்றி கூறிய நடிகர் சூரி…

தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லை சாமி, அது போல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லை சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர்.கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம்.

ஆனால் இந்த கொரோனா வைரஸானது காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. இது வரை 60 காவல் துறையினர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.

”காவல்துறையினர் தான் நிஜ கதாநாயகர்கள்” ஆட்டோகிராஃப் பெற்றுகொண்டு நன்றி கூறிய நடிகர் சூரி…

சினிமாவில் தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், பத்திரிக்கை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மை பாதுகாப்பவர்களுக்கு துணை நிற்போம்” என்று நடிகர் சூரி கூறினார். 

Share this story