திரையரங்கு உரிமையாளர்களை விளாசி அறிக்கை வெளியிட்டுள்ள உஷா ராஜேந்தர்!

திரையரங்கு உரிமையாளர்களை விளாசி அறிக்கை வெளியிட்டுள்ள உஷா ராஜேந்தர்!

தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை அவர்கள் விரும்பிய நேரத்தில் தூக்கமுடியும் எனும் போது தயாரிப்பாளர்களை மட்டும் ஏன் இத்தனை நாட்கள் கழித்து தான் படத்தை OTT-க்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர் என்று உஷா ராஜேந்தர் கேள்வி எழுப்பி தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கை பின்வருமாறு:

“வணக்கம். திரையரங்குகளில் படங்களை திரையிட வேண்டுமானால் 30 நாட்களுக்கு பிறகுதான் OTT-ல் ஒளிபரப்பப்படும் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கப்படவேண்டும் என்கிற திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமற்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு Print Control System அமுலில் இருந்த நேரத்தில், சென்னை உதயம் காம்ப்ளக்ஸில் ஒரு படம் திரையிடப்பட்டால் அந்தப்படம் வடபழனி ஏரியாவில் இருக்கும் திரையரங்குகளிலோ அல்லது அருகிலுள்ள காசி திரையரங்கிலோ திரையிடப்படமாட்டாது. ஆனால் மாறிவரும் தற்போதைய சூழலில் அனைத்து திரையரங்கத்திலும் ஒரே படத்தை ஒரே நேரத்தில் சுதந்திரமாக திரையிட்டு வசூலை திரையரங்க உரிமையாளர்கள் பிரித்து கொள்வது போல, தயாரிப்பாளர்களுக்கும் வியாபார சுதந்திரம் உண்டு என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் . திரையரங்கத்தில் படம் திரையிடப்படும் அதே நாளில் தயாரிப்பாளர் விருப்பப்பட்டால் OTT- லும் படத்தை வெளியிட்டு கொள்ளலாம். இதில் தலையிடுவதற்கோ, உத்தரவாத கடிதம் கேட்பதற்கோ எந்த சங்கத்திற்கும் தார்மீக உரிமையில்லை. 30 நாட்கள் கழித்துதான் OTT ல் திரைப்படம் வெளியாகும் என்ற உத்தரவாத கடிதம் கேட்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், குறிப்பிட்ட அந்த படத்தை 30 நாட்கள் தொடர்ச்சியாக எங்கள் திரையரங்குகளில் திரையிடுவோம் என்று உத்தரவாத கடிதம் கொடுக்கத் தயாரா …? திரையரங்க உரிமையாளர்கள் சில படங்களை மூன்றே நாட்களிலும், சில படங்களை ஒரு வாரத்திலும், சில படங்களை இரண்டு வாரங்களிலும் திரையரங்கை விட்டு தூக்கி விடுகிறீர்கள். பெரும்பாலான படங்களை இரண்டு வாரங்களுக்கு மேல் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் விரும்புவதில்லை. நிலைமை அப்படி இருக்க தயாரிப்பாளர்கள் OTT-ல் வெளியிடுவதற்காக ஏன் 30 நாட்கள் காத்திருக்கவேண்டும்?

திரையரங்கு உரிமையாளர்களை விளாசி அறிக்கை வெளியிட்டுள்ள உஷா ராஜேந்தர்!

எதற்காக எங்களை 30 நாட்கள் கழித்துதான் வெளியிட வேண்டும் என்று கட்டாய படுத்துகிறீர்கள்? ஒரு ..? திரையரங்க உரிமையாளர்கள் MG அடிப்படையில் படத்தை திரையிடுவதாக இருந்தால் OTT விஷயத்தில் நிபந்தனை விதிக்கலாம். அதை விடுத்து, சதவீத அடிப்படையில் படத்தை திரையிடும் உங்களுக்கு நங்கள் ஏன் உத்தரவாத கடிதம் கொடுக்க வேண்டும்..? இது குறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என முத்தரப்பும் ஆகியோர் கலந்து பேசி சுமூக முடிவை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story