சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் வெளியீடு… தேவாவின் குரலில் பீல்லாவுது பாடல்

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் வெளியீடு… தேவாவின் குரலில் பீல்லாவுது பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள வாழ் படத்தின் ‘பீல்’ பாடல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் வெளியீடு… தேவாவின் குரலில் பீல்லாவுது பாடல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன், நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களையும் தயாரித்து வருகிறார். அவர் தயாரித்த படம் ‘கனா’. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரித்தார்.

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் வெளியீடு… தேவாவின் குரலில் பீல்லாவுது பாடல்

இதையடுத்து சிவகார்த்திகேயன் மூன்றாவதாக தயாரித்துள்ள படம் ‘வாழ்’. அருவி படத்தை இயக்கிய அருண் இந்த படத்தை இயக்கியுள்ளார். அருவியை போன்று வித்தியாசமான கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் வெளியீடு… தேவாவின் குரலில் பீல்லாவுது பாடல்

இந்நிலையில் வாழ் படத்தின் பீல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தேனிசை தென்றல் தேவாவின் இந்த பாடலை பாடியுள்ளார். ‘ஹெவ் டூ பீல்’ என்று தொடங்கும் பாடலில் வாழ்க்கை மாறுமா ? கண்ண கழுவுனா… கடவுள் தெரியுமா என ரொம்ப உருக்கமாக இந்த பாடல் உள்ளது. இந்த பாடலை பார்த்து ரசிகர் உருகி வருகின்றனர். இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story