மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நடிகை வனிதா புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கிறார்.

முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதையடுத்து படங்களில் நடிக்காமல் திரையுலகைவிட்டு ஒதுங்கியே இருந்தார். பிறகு வனிதாவுக்கு திருமணம் நடைபெற்று, பின்னர் கணவரிடமிருந்து பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டார். சில நாட்களிலேயே போட்டியிலிருந்து வெளியேட்ட வனிதா, அடுத்து கலக்கப்போவது நிகழ்ச்சியில் இணைந்தார். பிறகு மற்றொரு பிரபல நிகச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தார்.

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

இதையடுத்து கொரோனா காலத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் யூடியூப் சேனல் தொடங்கி, வீடியோக்களை ஷேர் செய்து வந்தார். அப்போது கேமராமேன் பீட்டர் பால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் பீட்டர் பாலை 2வதாக திருமணம் செய்துக்கொண்டார். இதையடுத்து கோவாவுக்கு குடும்பத்துடன் சுற்றலா சென்றார். அப்போது பீட்டர் பால் மது அருந்துவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா பீட்டர் பாலை பிரிந்தார். பீட்டர் பாலிடம் தான் ஏமாந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

மீண்டும் ஹிரோயினாகும் நடிகை வனிதா…

இந்நிலையில் பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆதம் தாசன் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் வனிதா ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோயினுருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். இந்த படத்தில் நடிகர் கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Share this story