ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சோசியல் மீடியா கணக்குகள் மீட்பு!

ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சோசியல் மீடியா கணக்குகள் மீட்பு!

நேற்று முன்தினம் (03-12-2020) நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சோசியல் மீடியா கணக்குகள் மீட்பு!

தனது அனைத்து சோசியல் மீடியா கணக்குகளும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருந்த வரலட்சுமி அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

ஹேக் செய்யப்பட்ட வரலட்சுமியின் சோசியல் மீடியா கணக்குகள் மீட்பு!

அதில் “என்னுடைய கணக்குகளை அணுக முடியவில்லை.
அவற்றை மீட்க சில நாட்கள் ஆகலாம். அடுத்த சில நாட்களில் இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் இருந்து எனது பெயரில் வெளியாகும் எந்த செய்திகளையும் நம்பவேண்டாம். தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்குமாறு என்னைத் பின்தொடர்பவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்/” என்று தெரிவித்திருந்தார்.

தற்போது மீண்டும் தன்னுடைய சமூக வலைதளக் கணக்குகள் மீட்கப்பட்டுவிட்டதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது கணக்கை மீட்டெடுத்ததற்காக ட்விட்டருக்கு நன்றி! திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

Share this story