இந்த வாரம் சுசித்ரா உள்ள, இவரு தான் வெளியே! பரபரப்பான பிக்பாஸ் அப்டேட்!

இந்த வாரம் சுசித்ரா உள்ள, இவரு தான் வெளியே! பரபரப்பான பிக்பாஸ் அப்டேட்!

பரபரப்பாக நகர்ந்து வரும் இந்த பிக்பாஸ் சீசனின் முதல் வாரத்தில் நடிகை ரேகா வீட்டைக் காலி செய்தார். அதையடுத்து இரண்டாவது ஆளாக ஆஜித் வெளியேறத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஆஜித் தன் கையில் இருந்த எலிமினேஷனிலிருந்து காப்பாற்றும் பாஸை காண்பித்து எஸ்கேப் ஆகிவிட்டார். அதனால் கடந்த வாரம் யாரும் வீட்டை விட்டு வெளியேற்ற படவில்லை.

Image

தற்போது மூன்றாவது எலிமினேஷனுக்கான நேரம். இந்த வாரத்தில் சனம் அனிதா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், பாலா, ரியோ அஜித், சோம், சுரேஷ் சக்கரவர்த்தி, நிஷா, வேல்முருகன், ஆகிய 11 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள் .இவர்களில் சனம், அனிதா, ரம்யா பாண்டியன் ஜித்தன் ரமேஷ், பாலா, ரியோ இவர்கள் ஐந்து பேரும் நேற்றே காப்பாற்றப்பட்டார்கள். மீதி இருக்கும் ஆறு பேரில் யார் இன்று மூட்டை முடிச்சைக் கட்டப்போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

வேல்முருகன் தான் இன்றைக்கு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இந்த வாரம் வேல்முருகன் தான் எலிமினேட் ஆக இருப்பது 90% உறுதியாகியிருக்கிறது.

இந்த வாரம் சுசித்ரா உள்ள, இவரு தான் வெளியே! பரபரப்பான பிக்பாஸ் அப்டேட்!

இதற்கிடையில் பாடகி சுசித்ரா இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். பரபரப்பில்லாத போட்டியார்களை வெளியேற்றிவிட்டு சர்ச்சை நாயகர்களை களமிறக்கி போட்டியை சுவாரசியமாக்க பிக்பாஸ் குழுவினர் முயற்சித்து வருகின்றனர் போல.

Share this story