பிரம்மாண்டமாக வெளியாகும் ‘விடுதலை’… விஜய் சேதுபதிக்காக தயாரிப்பாளரின் புதிய முடிவு…

பிரம்மாண்டமாக வெளியாகும் ‘விடுதலை’… விஜய் சேதுபதிக்காக தயாரிப்பாளரின் புதிய முடிவு…

‘விடுதலை’ படத்தை பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரம்மாண்டமாக வெளியாகும் ‘விடுதலை’… விஜய் சேதுபதிக்காக தயாரிப்பாளரின் புதிய முடிவு…

வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் சூரியும், விஜய் சேதுபதியும் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர். முதல் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

பிரம்மாண்டமாக வெளியாகும் ‘விடுதலை’… விஜய் சேதுபதிக்காக தயாரிப்பாளரின் புதிய முடிவு…

மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாகவும், நடிகர் கிஷோர் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இதோடு சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் காடுகளில் கடும் குளிரில் படமாக்கப்பட்டு வந்ததது. தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்டமாக வெளியாகும் ‘விடுதலை’… விஜய் சேதுபதிக்காக தயாரிப்பாளரின் புதிய முடிவு…

இதற்கிடையே ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரி போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு இந்தியா முழுவதும் பரவலான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்த விஷயம். விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்துள்ளதால் விடுதலை படத்தை இந்தியா முழுமைக்கான படமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் தமிழை தவிர, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Share this story