வீட்டில் இரு..! விழித்திரு.! பிகில் பாரு..!- TRP-யை உயர்த்த விஜய் ரசிகர்களின் நூதன விளம்பரம்….
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் பிகில். விஜய் – அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான இப்படம் பெரிய வசூல் சாதனை செய்தது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல் என்று 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப்படத்தில் பாடல்களும் பயங்கர ஹிட்தான்.. இந்தப்படத்தில், விஜய்யுடன் நயன்தாரா, யோகிபாபு, கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, நடிகர் ரோபோ சங்கரின் மகள் , அம்ரிதா ஐயர், ரெப்பா மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..
இந்நிலையில் இந்தப்படம், நாளை (ஜூலை 2 ) ஞாயிற்றுக்கிழமை அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பாக இருக்கிறது.. இதனையடுத்து பிகில் படத்தின் TRP யை உயர்த்திட, விஜய் ரசிகர்கள் நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ரசிகர்கள், நோட்டீஸ் அடித்து மக்களிடம் கொடுப்பது மட்டுமின்றி சாலையோர சுவர்கள், கம்பங்களில் ஒட்டியுள்ளனர்..
அந்த நோட்டீஸில், ”TRP ஐ உயர்த்துவோம், TRP மன்னன் என உரக்கச்சொல்வோம்..”, “வீட்டில் இரு..! விழித்திரு.! பிகில் பாரு..!” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன…