சைக்கிள் சம்பவத்தை அடுத்து சைலண்டாக ஜார்ஜியா பறக்கும் விஜய்… விமான நிலைய வைரல் புகைப்படங்கள்!

சைக்கிள் சம்பவத்தை அடுத்து சைலண்டாக ஜார்ஜியா பறக்கும் விஜய்… விமான நிலைய வைரல் புகைப்படங்கள்!

நடிகர் விஜய் ஜார்ஜியா பார்ப்பதற்காக சென்னை விமான நிலையம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தற்போது தனது 65-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

சைக்கிள் சம்பவத்தை அடுத்து சைலண்டாக ஜார்ஜியா பறக்கும் விஜய்… விமான நிலைய வைரல் புகைப்படங்கள்!

இவர்களுடன் அபர்ணா தாஸ், கவின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு பறக்க இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது.

சைக்கிள் சம்பவத்தை அடுத்து சைலண்டாக ஜார்ஜியா பறக்கும் விஜய்… விமான நிலைய வைரல் புகைப்படங்கள்!

இந்நிலையில், நேற்று தேர்தலுக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார் விஜய். நேற்று முழுவதும் விஜய் சைக்கிளில் வந்த செய்தி தான் தமிழகம் முழுக்க ஹைலைட்.

சைக்கிள் சம்பவத்தை அடுத்து சைலண்டாக ஜார்ஜியா பறக்கும் விஜய்… விமான நிலைய வைரல் புகைப்படங்கள்!

இந்நிலையில் தற்போது படக்குழு ஜார்ஜியா நாட்டிற்கு பறக்கத் தயாராகி உள்ளனர். அதற்காக விஜய் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜார்ஜியாவில் படக்குழுவினர் 16 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பைத் தொடர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில் படக்குழு அந்த காட்சிகளை காஷ்மீரில் தான் படமாக்கத் திட்டமிட்டனராம். ஆனால், காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது பாதுகாப்பாக இருக்காது என்பதால், ஜார்ஜியா செல்ல முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

Share this story