லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஷ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். டி இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், துரதிருஷ்டவசமாக படத்தின் இயக்குனர் ஜனநாதன் உடல்நலக் குறைவால் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

நேற்று படம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த தயாரிப்பு நிறுவனம் “எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம்.

அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” என்று தெரிவித்திருந்தனர்.

லாபம் படத்திற்காக துக்ளக் தர்பார் பட தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி!

இதற்கிடையில் விஜய் சேதுபதி டெல்லி தீனதயாளன் இயக்கத்தில் நடித்துள்ள ‘துக்ளக் தர்பார்’ படமும் ஏப்ரல் மாதம் லாபம் வெளியாகும் அதே தேதியில் வெளியாவதாக இருந்துள்ளது. எனவே நடிகர் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் பேசி லாபம் படம் ஏப்ரல் மாதம் வெளியாகட்டும், துக்ளக் தர்பார் படத்தை சில நாட்கள் கழித்து வெளியிடலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார். விஜய் சேதுபதியின் கோரிக்கையை ஏற்ற லலித்குமாரும் துக்ளக் தர்பார் பட ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்துள்ளனராம். இதனால் தான் லாபம் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது என்றும் கூறப்படுகிறது.

Share this story