ஷூட்டிங்கிற்காக தமிழகம் வந்த அல்லு அர்ஜுன்… நேரில் சென்ற சந்தித்த விஜய் சேதுபதி!?

ஷூட்டிங்கிற்காக தமிழகம் வந்த அல்லு அர்ஜுன்… நேரில் சென்ற சந்தித்த விஜய் சேதுபதி!?

படப்பிடிப்பிற்காக தமிழகம் வந்துள்ள நடிகர் அல்லு அர்ஜுன் விஜய் சேதுபதியைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். சந்தனமரக் கடத்தல் சம்பவங்களை அடிப்படியாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ஷூட்டிங்கிற்காக தமிழகம் வந்த அல்லு அர்ஜுன்… நேரில் சென்ற சந்தித்த விஜய் சேதுபதி!?

சந்தனக் கடத்தல் பற்றிய படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது அல்லு அர்ஜுன் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தென்காசிக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது விஜய் சேதுபதி அங்கு சென்று அல்லு அர்ஜுனைச் சந்தித்துள்ளார். இருவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறுவதால் விஜய் சேதுபதி அல்லு அர்ஜுனைக் காணச் சென்றிருக்கிறார்.

ஷூட்டிங்கிற்காக தமிழகம் வந்த அல்லு அர்ஜுன்… நேரில் சென்ற சந்தித்த விஜய் சேதுபதி!?

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் முதலில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் பல படங்களில் பிசியாக நடித்து வந்ததால் விஜய் சேதுபதி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.

தற்போது இந்தச் சந்திப்பை அடுத்து இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Share this story