இந்த கேள்வியே அவசியில்லாதது – மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி காட்டம்…

இந்த கேள்வியே அவசியில்லாதது – மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி காட்டம்…

மாஸ்டர் படம் வெற்றிப்பெற விஜய் மட்டுமே காரணம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை ஓ.எம்.ஆரில் தனியார் ஷோரும் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஷோருமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த கேள்வியே அவசியில்லாதது – மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி காட்டம்…

விஜய் சேதுபதி ஷோரும் திறக்க வருவதை அறிந்த பொதுமக்களும், ரசிகர்களும் கடைமுன் குவிந்தனர். கூட்டம் கூடியதால் கடைசியிலிருந்து வெளியேற முடியாமல் தினறினார் விஜய் சேதுபதி. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் பொதுமக்கள், ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எப்படியோ பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து காரில் ஏறி சென்றார் விஜய் சேதுபதி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, விஜய், லோகேஷ் கனகாஜ், லலித்குமார், பொதுமக்கள் ஆகியோருக்கு ரொம்ப நன்றி. மாஸ்டர் படத்தால் மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்க்கின்றனர். இது நிறைய பேரின் வாழ்க்கையை தொடங்கி வைத்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த கேள்வியே அவசியில்லாதது – மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி காட்டம்…

800 படத்தை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, 800 பட பிரச்சனை முடிந்துவிட்டது. அதை மீண்டும் கிளப்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த கேள்வியே அவசியில்லாதது – மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி காட்டம்…

மாஸ்டர் என்றாலே, அது விஜய் சேதுபதிதான் என்று சிலர் கூறுகிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு காட்டமாக பதிலளித்த விஜய் சேதுபதி, இந்த கேள்வியே தேவையில்லாதது, விஜய்யால் மட்டுமே மாஸ்டர் சிறப்பாக ஓடியது என்று தெரிவித்தார்.

Share this story