“சர்ச்சையான பிறந்தநாள்” வருத்தம் தெரிவித்த ‘விஜய் சேதுபதி’

“சர்ச்சையான பிறந்தநாள்” வருத்தம் தெரிவித்த ‘விஜய் சேதுபதி’

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டா கத்தியை வைத்து விஜய் சேதுபதி கேக் வெட்டியதால் சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழில் முன்னணி கதாநாயகன் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ரசிகர்கள் இவரது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று விஜய் சேதுபதியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றார்.

“சர்ச்சையான பிறந்தநாள்” வருத்தம் தெரிவித்த ‘விஜய் சேதுபதி’

இந்நிலையில் நேற்று இரவு சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாடி புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது. அதில் விஜய் சேதுபதி, இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அப்போது அவர் பட்டா கத்தியால் கேக்கை வெட்டியது போல புகைப்படம் உள்ளது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு முன்னணி நடிகரே இப்படி தவறான முன் உதாரணமாக இருக்கலாமா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“சர்ச்சையான பிறந்தநாள்” வருத்தம் தெரிவித்த ‘விஜய் சேதுபதி’

இதையடுத்து விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாளுக்கு முன்னர் என அலுவலகத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பட்டாக் கத்தியால் கேக்கை வெட்டியிருப்பேன்.

“சர்ச்சையான பிறந்தநாள்” வருத்தம் தெரிவித்த ‘விஜய் சேதுபதி’

தற்போது பொன்ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படத்தின் கதைப்படி ஒரு பட்டா கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால் அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும்போது அதே பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டினேன்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் என கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இதுபோன்ற விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சம்பவம் யாருடைய மனதை புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Share this story