ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!

ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது.

பொதுவாகவே எங்கு ஷூட்டிங் நடந்தாலும், அப்பகுதி மக்கள் திரையில் பார்த்த நடிகர்களை நேரில் பார்க்கலாம் என்று திருவிழா போல் குழுமிவிடுவார்கள். அதேபோல் தான் லாபம் படத்திற்கும் நடந்திருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசனைப் பார்க்க ஏராளமான கூட்டம் குவிந்துள்ளனர். அப்படி வருபவர்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவில்லையாம்.

ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!

இதனால் தான் சில நாட்களுக்கு முன் ஸ்ருதி ஹாசன் லாபம் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. ஆம், லாபம் படப்பிடிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி நடிகை ஸ்ருதி ஹாசன் அப்படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!

தற்போது லாபம் படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தி முடிக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளனர். இன்னும் பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெரும் என்றும் கூறப்படுகிறது.

ஷூட்டிங்கைப் பார்க்கக் குவியும் மக்கள் கூட்டம்… போலீஸ் பாதுகாப்பு கேட்ட விஜய் சேதுபதி படக்குழுவினர்!

ஈ, பேராண்மை படங்களை இயக்கிய எஸ்பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ‘லாபம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Share this story