இணைவார்களா பாரதியும், கண்ணம்மாவும் ?… விறுவிறுப்பாகும் சீரியல்…

இணைவார்களா பாரதியும், கண்ணம்மாவும் ?… விறுவிறுப்பாகும் சீரியல்…

பரப்பரப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இணைவார்களா பாரதியும், கண்ணம்மாவும் ?… விறுவிறுப்பாகும் சீரியல்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சீரியல்களில் ஒன்று ‘பாரதி கண்ணம்மா’. இரண்டு ஆண்டகளாக ஒளிபரப்பி வரும் இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வங்காளத்தில் பெரிய ஹிட் பெற்ற ‘கிருஷ்ணகோலி’ என்ற சீரியலின் தழுவலான இந்த சீரியல் உருவாகியுள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கேரக்டரில் ரோஷ்ணி நடித்துள்ளார், கம்பீரமான இந்த கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார் ரோஷினி. பாரதியாக பிரசாத் நடித்து வருகிறார். இந்த இரு கேரக்டரை மையமாக வைத்துதான் இந்த சீரியல் கதை நகர்கிறது.

இணைவார்களா பாரதியும், கண்ணம்மாவும் ?… விறுவிறுப்பாகும் சீரியல்…

இந்த இரண்டு கேரக்டர்கள் நடுவே வில்லியாக நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா. சந்தேகத்தால் ஒரு அன்பான கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறும் மனைவி, எவ்வாறு பாரதி கண்ட புதுமை பெண்ணாக மாறி தன்னுடைய பெண் குழந்தையை தனியாக வளர்கிறாள் என்பதுதான் மொத்த கதையாக இருக்கிறது.

இணைவார்களா பாரதியும், கண்ணம்மாவும் ?… விறுவிறுப்பாகும் சீரியல்…

பாரதியும், கண்ணம்மாவும் எப்போது இணைவார்கள் என்ற அதிரடி திருப்பங்களுடன் தற்போது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் நாயகன்-நாயகி இடையே ஒரு பரபரப்பான வாக்குவாதம் செய்யும் காட்சி உள்ளதாம்.அந்த காட்சி அடுத்த ஒருவாரத்தில் பரபரப்பாகப் ஒளிப்பரப்பாக போகிறது. இந்த சண்டையில் முடிவில் இருவரும் இணைவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Share this story