அன்புடன் குஷியை இனி பார்க்க முடியாது… ஹீரோயின் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….

அன்புடன் குஷியை இனி பார்க்க முடியாது…  ஹீரோயின் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….

அன்புடன் குஷி சீரியலில் இருந்து,அதன் ஹீரோயின் விலகியுள்ளதால்‌ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அன்புடன் குஷியை இனி பார்க்க முடியாது…  ஹீரோயின் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சீரியல்கள் போய்க்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது ஓடிடி தளங்களிலும் ஒளிபரப்பாகி வருவதால் பார்வையாளர்கள் விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதுவும் விஜய் டிவி சீரியல் என்றாலே தனி கவனம் பெறுகிறது. இந்த டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘அன்புடன் குஷி’.

அன்புடன் குஷியை இனி பார்க்க முடியாது…  ஹீரோயின் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் ஹீரோவாக ப்ரஜின் நடித்து வருகிறார். இந்த சீரியலில் குஷி கதாபாத்திரம் மிக முக்கியமானது. அந்த கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் மான்சி ஜோஷி நடித்து வந்தார்.அதன்பின் சில பிரச்சினைகளால் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.அவருக்கு பதிலாக தற்போது ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியல் 200-க்கும் அதிகமான எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பார்வையாளர் அதிகம் உள்ள இந்த சீரியலில் இருந்து ரேஷ்மாவும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அன்புடன் குஷியை இனி பார்க்க முடியாது…  ஹீரோயின் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி….

இந்த விலகல் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘அன்புடன் குஷி’ சீரியலில் இனி என்னை குஷியாக பார்க்க முடியாது. குஷி கேரக்டரை ரொம்பவும் மிஸ் பண்ணறன். சீரியல் குழுவிற்கும், விஜய் டிவிக்கும், ரசிகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவை என்றும்‌ எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,விரைவில் நல்ல தகவலுடன் உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே என குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Share this story